"அன்னம் பரப்பிரம்மம்' என்பர். ஆம்... உணவை இறைவனாகப் பார்க்கிறது ஆன்மிகம். உடலை வளர்ப்பதுடன், உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம் தான். இதனால் தான், ஐப்பசி பவுர்ணமி அன்று, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தப் படுகிறது.
அன்னத்தின் பெருமையை விளக்கும் கதையைக் கேளுங்கள்...
முனிவர் ஒருவர், ஒரு தேசத்தின் ராஜாவைச் சந்தித்தார். அவரை வரவேற்ற அவன், தனியறையில் தங்க வைத்து, சகல வசதிகளையும் செய்து கொடுத்து, சாப்பிட்டு விட்டுப் போகும்படி கட்டாயப்படுத்தினான்; முனிவர் மறுத்தார். இருப்பினும், நியமத்துடன் சமைத்துப் போடுவதாக வாக்களித்து, சமையலுக்கும் தனியாட்களை ஏற்பாடு செய்தான்; முனிவரும் சாப்பிட்டார். பலவகை உணவுகளால் வயிறு மந்தமாயிற்று; தூக்கம் வந்தது. சற்று நேரம் தூங்கி, பின் விழித்ததும், கண் எதிரே இருந்த சுவரில் ஒரு முத்துமாலை தொங்கியதைப் பார்த்தார். உள்ளே சென்ற உணவின் தாக்கமோ என்னவோ... அதை எடுத்து வைத்துக் கொண்டால் என்ன என்று முனிவருக்கு தோன்றியது. அதையெடுத்து தன் வஸ்திரத்தில் முடிந்து வைத்துக் கொண்டார்.
சற்று நேரம் கழித்து, ராஜாவிடம் விடைபெற்று, தன் ஆசிரமத்துக்குப் போய் விட்டார். அவர் சென்ற பிறகு தான், மாலை காணாமல் போன விஷயம் வெளிப்பட்டது. அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்தனர். அந்த அறைக்கு வந்து போன அப்பாவிகளுக்கெல்லாம் உதை விழுந்தது; ஆனால், அவர்களோ ஒரேயடியாக மறுத்தனர். முனிவர் மீது சந்தேகம் என்ற சிந்தனை கூட யாருக்கும் வரவில்லை. அவர் முற்றும் துறந்தவர் என்பதில் எல்லாருக்கும் முழு நம்பிக்கை.
அன்றிரவு, முனிவருக்கு வயிறு, "கடமுடா' என்றது; கடும் பேதி. வயிறு குறைய, குறைய மனசும் பழைய நிலைக்கு வந்து விட்டது.
"அவசரப்பட்டு தப்பு செய்து விட்டோமே... நேற்று விசாரணையில் அப்பாவிகளெல்லாம் அடி வாங்கியிருப்பரே... என்ன நடந்தாலும் பரவாயில்லை. ராஜாவிடம் இதை ஒப்படைத்து, கொடுக்கிற தண்டனையைப் பெற்றுக் கொள்வோம்' என்று சென்றார். ராஜாவிடம் உண்மையைச் சொல்லி, மாலையை ஒப்படைத்தார்.
"யாரோ ஒருவன் இதைத் திருடி உங்களிடம் ஒப்படைத்திருக்கிறான். அவனைக் காப்பாற்ற நீங்கள் திருடியது போல் நாடகமாடுகிறீர்கள். நீங்களாவது, திருடுவதாவது...இதைக் கேட்கவே மனம் சகிக்கவில்லை...' என்றான் ராஜா. அவ்வளவு நம்பிக்கை!
முனிவரோ, தன் கருத்தில் விடாப்பிடியாய் நின்றார்.
ராஜா அவரிடம், "நீங்கள் சொல்வது உண்மையாயினும், அதற்கும் ஒரு காரணம் இருந்திருக்க வேண்டுமே... அதுபற்றி ஏதாவது உங்கள் பேரறிவுக்கு புலப்படுகிறதா?' எனக் கேட்டான்.
"மன்னா... நேற்றைய உணவை சமைத்தது யார்? அதற்கு பயன்படுத்திய பொருட்கள் எந்த வழியில் வந்தன என சொல்...' என்றார்.
"சுவாமி... திருடன் ஒருவன் ஒரு அரிசிக் கடையை உடைத்து மூடையை தூக்கிச் சென்ற போது, பறிமுதல் செய்த அரிசி அது. அரிசிக்குரியவர் உரிய ஆவணம் தராததால், அரண்மனை கிட்டங்கியில் சேர்க்கப்பட்டது...' என்றான்.
"பார்த்தாயா... திருட்டு அரிசியை சாப்பிட்டதால், திருட்டு புத்தி வந்துள்ளது...' என்றார் முனிவர்.
"அப்படியே இருந்தாலும் கூட, அப்படி ஒரு அரிசியை சமைக்க காரணமான நான் தான் குற்றவாளி...' என்ற ராஜா, முனிவரை அனுப்பி விட்டான்.
உணவு பயிரிடும் விதம், பயிரிடுபவர், சமைப்பவர் இவற்றைப் பொறுத்தே சாப்பாட்டின் தரம் அமையும். அதைச் சாப்பிடும் போது, அந்த குணநலன்கள் மனிதனை தாக்கும். அதனால் தான், இறைவனுக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகிறோம். பிரசாதத்தை "ப்ர+சாதம்' என சொல்ல வேண்டும். "சாதம்' சாதாரண உணவு; "ப்ர' என்றால், கடவுள். அதுவே கடவுளுக்கு படைக்கப்பட்டு விட்டால், அதிலுள்ள தோஷங்கள் விலகி, "பிரசாதம்' ஆகி விடுகிறது. இதனால் தான், சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்தி, உணவளித் தனர்.
தஞ்சை பெரிய கோவிலில், நூறு மூடை அரிசி சமைத்து பிரகதீஸ்வரருக்கு அபிஷேகம் செய்கின்றனர். ஐப்பசி சதயத்தில் தான், ராஜராஜ சோழனுக்கு பிறந்தநாள் வருகிறது. அதை முன்னிட்டு, இந்த தர்மத்துக்கு அவன் ஏற்பாடு செய்திருக்கலாம். கால வெள்ளத்தில், இது எல்லா சிவாலயங்களுக்கும் பரவியிருக்க வேண்டும்.
பயிரிடும் போதும், சமைக்கும் போதும், சாப்பிடும் போதும் நல்லதையே சிந்தித்தால், நாம் சாப்பிடும் சாப்பாடே பிரசாதம் ஆகிவிடும். இனியேனும் செய்வோமா!
nanri: dinamalar varamalar
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உணவளிப்பது (அன்னதானம்) புண்ணியங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது இருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவதை விட இல்லாதவர்களுக்கு/மனவளம் குன்றியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வயிறு நிறைய உணவு அளித்தால் அனைத்து வகைப் புண்ணியமும் கிடைக்கும். சில தோஷங்களையும் நீக்கும்.
அன்னதானத்திற்கு அடுத்தபடியாக வஸ்திர தானம் (ஆடையை தானமாக வழங்குதல்), மாங்கல்ய தானம் (ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி செய்வது முன்னின்று செய்வது) சிறந்தவையாக கருதப்படுகிறது.
இவைகளை விட சிறந்த புண்ணியம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவலாம். இதனை செய்வதால் பிரம்மஹத்தி தோஷம் கூட விலகும் என சில ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.
"ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் - அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்" - திருவள்ளுவர்
முனிவர்கள் / துறவிகள் போன்ற சான்றோர்கள் தம் தவ வலிமையினால் தமக்குப் பசி தோன்றாதவாறு தம் பசியை ஆற்றிக்கொள்வார்கள். அவ்வாறு தமது பசியை ஆற்றிக்கொள்ளும் துறவிகளின் வலிமையைக் காட்டிலும், பிறர் பசியாற உணவளித்துக் காப்பவரின் வலிமையே சிறந்தது என, அன்னதானத்தின் பெருமையைத் தெயவப் புலவர் திருவள்ளுவர் மிகவும் சிறப்பித்து கூறுகிறார்
பால் - துன்பம் நீங்கும். ஆடை - ஆயுள் கூடும். தீபம் - கண்ணொளி சீராகும். கோயில்களுக்கு தீபம் போடுவதால் அரச பதவி கிட்டும். எள் தானத்தினால் எம பயம் விலகும். வெண்கலப் பாத்திரத்தில் தேன் தானம் செய்தால் புத்திரப் பேறு கிட்டும்.
பசு தானம் செய்தால் கிரிகடன், தேவ கடன், பித்ரு கடன் என்ற மூன்று கடன்களும் தீரும். அரிசி தானம் செய்தால் சகல பாவமும் தீரும். தாம்பூலம் பழத்துடன் கொடுப்பதால் லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும்.
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். இதைச் செய்தால் சொர்க்கம் கிட்டும். தற்காலத்தில் ரத்த தானம், கண் தானம் என்று சொல்லுவார்கள். இவைகளும் சிறந்த தானங்கள் தான். ஆனால் இவற்றை எப்பொழுதும் கொடுக்க முடியாது. ரத்ததானம் செய்யவும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. நீண்ட இடைவெளியும், நோயற்ற உடலும் இருக்க வேண்டும். கண்தானமும் இறந்த பின்புதான் செய்ய முடியும். ஆனால் அன்னதானம் நினைத்த நேரத்தில் செய்ய முடியும். நெல்லிக்கனி தானம் ஞானத்தைத் தரும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் கன்னிகாதானத்தை செய்தால் பிரம்ம பதவி கிட்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
தானங்கள் தங்கள் சக்திக்கு ஏற்பச் செய்ய வேண்டும் என்பது மிக முக்கியம். இப்படிச் செய்வதனால் யம பயம் இன்றி நேராகக் கைலாயம் செல்லலாம்.
தாம்பூலம் வெற்றுத் தாம்பூலமாக தராமல் கஸ்தூரி, கோரோஜனம் சேர்த்து தாம்பூல தானத்தைத் தரவேண்டும். இதனால் ராஜகுலத்தில் பிறந்து ராஜபோக வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்பார்கள். வஸ்திர தானம் வியாதியைத் தீர்க்கும். கற்பூர தானம் சக்ரவர்த்தியாகப் பிறக்கும் பாக்கியத்தைத் தரும். தாமரைப் பூ, மல்லிகைப் பூ மாலைகளை தானமாகக் கொடுத்தால் மன்னர் குலத்தில் பிறக்கும் பாக்கியம் கிடைக்கும்.
மலர்களைப் பற்றிக் கூறும்பொழுது ஒரு சிறு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. கோயில்களில் பூவை பிரசாதமாகத் தருவதும், வீடுகளில் சுமங்கலி, கன்னிப் பெண்களுக்கு பூக்களைத் தருவதும் ஒரு சம்பிரதாய பழக்கத்துடன் கூடிய புண்ணிய செயலாகும். தாழம்பூ தானம் செய்தால் விஷ்ணுவின் அனுக்கிரகம் கிடைக்கும். பாக்கு, வாசனை திரவியங்கள், பழங்கள் தானம் செய்தால் உயர் பதவி கிட்டும். மோர், பானகம், குடி தண்ணீர் தானம் தந்தால் ஜென்மாந்திர பாவம் தீரும் என்பார்கள்.
வீட்டிற்கு வருபவர்களுக்கு மோர், தண்ணீர் கொடுத்து உபசரிப்பது கூட தானம்தான். தானிய தானம் அகால மரணத்திலிருந்து காப்பாற்றும்.
அன்னதான மகிமையை விளக்கும் கதை
கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட - தான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்தவன். தானத்திற்கே பெயர் பெற்றவன். தானம் என்றால் என்ன என்பதை உலகிற்குக் காட்டியவன். அவன் இறந்ததும் கண்ணனால் சுவர்க்கத்துக்கு அனுப்பப்பட்டவன்.
அங்கு சென்று சகல வசதிகளுடன் இருந்தும் அவனுக்கு ஏனோ பசி அடங்கவில்லை. எப்பொழுதும் வயிற்றுப்பசி இருந்து கொண்டே இருந்தது. அவனும் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போனான். பிறகு சுவர்க்கத்தின தலைவனிடம் சென்று கேட்டான். நான் எவ்வளவு தான தருமங்கள் செய்திருக்கிறேன் - எனக்கு ஏன் இக்கொடிய தண்டனை - எனக்கு ஏன் இப்படிப் பசிக்கிறது எனக் கேட்டான்.
தலைவனோ - கர்ணா நீ பூவுலகில் வாழ்ந்த காலத்தில் பொன்னும் பொருளும் மனியும் ஏன் உன்னுயிரும் தானமாகக் கொடுத்து பெரும் புகழ் பெற்றவன். ஆனால் சிந்தித்துச் சொல் - எப்போழுதாவது யாருக்காகவாது அன்ன தானம் செய்திருக்கிறாயா - எனக் கேட்டான்.
கர்ணனுக்கு அன்ன தான செய்ததாக நினைவு இல்லை. அன்ன தானம் செய்யாததால் தான் இப்பொழுது வயிற்றுப்பசி அடங்க வில்லை எனவும் கூறக் கேட்டான். அப்படியானால் இதற்கு என்ன தான் வழி எனக் கேட்ட போது - தலைவன் கூறினான் - உனது வலது கை ஆள் காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் - பசி அடங்கி விடும் என்றான்.
கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. விரலைச் சப்பினால் பசி அடங்குமா - என்ன இது என ஐயப்பாடு இருந்தாலும் - வேறு வழி இல்லை என வலது கை ஆள் காட்டி விரலை வாயில் வைத்து சப்ப - பசி உடனே அடங்கிற்று.
ஒன்றும் புரியாத கர்ணன் - இது எப்படி மாய மந்திரம் எனக் கேட்க - தலைவன் கூறினான் - அன்பின் கர்ணா - நீ பூவுலகில் வாழும் போது உன்னிடம் ஒரு வறியவன் பசியுடன் வந்து எங்கு அன்னதானச் சத்திரம் இருக்கிறதென்று கேட்க - நீயும் உனது வலது கை ஆள்காட்டி விரலால் இதோ இப்பக்கம் செல்க என வழி காட்டினாய். அந்த புண்ணியச் செயல் - நற்செயல் உனக்கு இப்பொழுது உதவுகிறது எனக் கூற -கர்ணனும் அன்ன தான மகிமையை உணர்ந்தான்.
- நாமும் பிறந்த நாள் - திருமண நாள் - என்று கொண்டாடும் போதெல்லாம் - முதியோர் இல்லங்களில் வாழ்பவர்கள் - அனாதை இல்லங்களில் வாழ்பவர்கள் - வறியோர் இவர்களுக்கெல்லாம் அன்ன தானம் செய்தால் அவர்கள் பெறும் மகிழ்ச்சியானது நமக்கும் மகிழ்ச்சியினையும் புண்ணியத்தைனையும் தரும் .
அண்ணாமலையில் அன்னதானம் செய்யுங்கள்;நிம்மதியாக வாழுங்கள்
கோயில்களில் ஒரு வருடம் தொடர்ந்து செய்யப்படும் அன்னதானத்தால்
என்ன புண்ணியம் கிடைக்குமோ, அதை விட அதிகமான புண்ணியம் காசியில்
ஒரே ஒரு நாள் ஏழை ஒருவனுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.
காசியில் ஒரு ஆண்டு முழுக்க செய்யப்படும் அன்னதானம் தரும் புண்ணியத்தை
விட அதிக புண்ணியம் திரு அண்ணாமலையில் ஒரே ஒரு சாதாரண நாளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.
திருஅண்ணாமலையில் துவாதசி திதியன்று ஏழை ஒருவருக்கு செய்யப்படும்
அன்னதானமானது, அன்னதானம் செய்தவரின் வாழ்நாள் முழுக்க அன்னதானம்
செய்த பலனைத் தரும் என்பது அண்ணாமலையாரின் வாக்கு.ஆதாரம்:
அருணாச்சல புராணம்.
அன்னத்தின் பெருமையை விளக்கும் கதையைக் கேளுங்கள்...
முனிவர் ஒருவர், ஒரு தேசத்தின் ராஜாவைச் சந்தித்தார். அவரை வரவேற்ற அவன், தனியறையில் தங்க வைத்து, சகல வசதிகளையும் செய்து கொடுத்து, சாப்பிட்டு விட்டுப் போகும்படி கட்டாயப்படுத்தினான்; முனிவர் மறுத்தார். இருப்பினும், நியமத்துடன் சமைத்துப் போடுவதாக வாக்களித்து, சமையலுக்கும் தனியாட்களை ஏற்பாடு செய்தான்; முனிவரும் சாப்பிட்டார். பலவகை உணவுகளால் வயிறு மந்தமாயிற்று; தூக்கம் வந்தது. சற்று நேரம் தூங்கி, பின் விழித்ததும், கண் எதிரே இருந்த சுவரில் ஒரு முத்துமாலை தொங்கியதைப் பார்த்தார். உள்ளே சென்ற உணவின் தாக்கமோ என்னவோ... அதை எடுத்து வைத்துக் கொண்டால் என்ன என்று முனிவருக்கு தோன்றியது. அதையெடுத்து தன் வஸ்திரத்தில் முடிந்து வைத்துக் கொண்டார்.
சற்று நேரம் கழித்து, ராஜாவிடம் விடைபெற்று, தன் ஆசிரமத்துக்குப் போய் விட்டார். அவர் சென்ற பிறகு தான், மாலை காணாமல் போன விஷயம் வெளிப்பட்டது. அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்தனர். அந்த அறைக்கு வந்து போன அப்பாவிகளுக்கெல்லாம் உதை விழுந்தது; ஆனால், அவர்களோ ஒரேயடியாக மறுத்தனர். முனிவர் மீது சந்தேகம் என்ற சிந்தனை கூட யாருக்கும் வரவில்லை. அவர் முற்றும் துறந்தவர் என்பதில் எல்லாருக்கும் முழு நம்பிக்கை.
அன்றிரவு, முனிவருக்கு வயிறு, "கடமுடா' என்றது; கடும் பேதி. வயிறு குறைய, குறைய மனசும் பழைய நிலைக்கு வந்து விட்டது.
"அவசரப்பட்டு தப்பு செய்து விட்டோமே... நேற்று விசாரணையில் அப்பாவிகளெல்லாம் அடி வாங்கியிருப்பரே... என்ன நடந்தாலும் பரவாயில்லை. ராஜாவிடம் இதை ஒப்படைத்து, கொடுக்கிற தண்டனையைப் பெற்றுக் கொள்வோம்' என்று சென்றார். ராஜாவிடம் உண்மையைச் சொல்லி, மாலையை ஒப்படைத்தார்.
"யாரோ ஒருவன் இதைத் திருடி உங்களிடம் ஒப்படைத்திருக்கிறான். அவனைக் காப்பாற்ற நீங்கள் திருடியது போல் நாடகமாடுகிறீர்கள். நீங்களாவது, திருடுவதாவது...இதைக் கேட்கவே மனம் சகிக்கவில்லை...' என்றான் ராஜா. அவ்வளவு நம்பிக்கை!
முனிவரோ, தன் கருத்தில் விடாப்பிடியாய் நின்றார்.
ராஜா அவரிடம், "நீங்கள் சொல்வது உண்மையாயினும், அதற்கும் ஒரு காரணம் இருந்திருக்க வேண்டுமே... அதுபற்றி ஏதாவது உங்கள் பேரறிவுக்கு புலப்படுகிறதா?' எனக் கேட்டான்.
"மன்னா... நேற்றைய உணவை சமைத்தது யார்? அதற்கு பயன்படுத்திய பொருட்கள் எந்த வழியில் வந்தன என சொல்...' என்றார்.
"சுவாமி... திருடன் ஒருவன் ஒரு அரிசிக் கடையை உடைத்து மூடையை தூக்கிச் சென்ற போது, பறிமுதல் செய்த அரிசி அது. அரிசிக்குரியவர் உரிய ஆவணம் தராததால், அரண்மனை கிட்டங்கியில் சேர்க்கப்பட்டது...' என்றான்.
"பார்த்தாயா... திருட்டு அரிசியை சாப்பிட்டதால், திருட்டு புத்தி வந்துள்ளது...' என்றார் முனிவர்.
"அப்படியே இருந்தாலும் கூட, அப்படி ஒரு அரிசியை சமைக்க காரணமான நான் தான் குற்றவாளி...' என்ற ராஜா, முனிவரை அனுப்பி விட்டான்.
உணவு பயிரிடும் விதம், பயிரிடுபவர், சமைப்பவர் இவற்றைப் பொறுத்தே சாப்பாட்டின் தரம் அமையும். அதைச் சாப்பிடும் போது, அந்த குணநலன்கள் மனிதனை தாக்கும். அதனால் தான், இறைவனுக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகிறோம். பிரசாதத்தை "ப்ர+சாதம்' என சொல்ல வேண்டும். "சாதம்' சாதாரண உணவு; "ப்ர' என்றால், கடவுள். அதுவே கடவுளுக்கு படைக்கப்பட்டு விட்டால், அதிலுள்ள தோஷங்கள் விலகி, "பிரசாதம்' ஆகி விடுகிறது. இதனால் தான், சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்தி, உணவளித் தனர்.
தஞ்சை பெரிய கோவிலில், நூறு மூடை அரிசி சமைத்து பிரகதீஸ்வரருக்கு அபிஷேகம் செய்கின்றனர். ஐப்பசி சதயத்தில் தான், ராஜராஜ சோழனுக்கு பிறந்தநாள் வருகிறது. அதை முன்னிட்டு, இந்த தர்மத்துக்கு அவன் ஏற்பாடு செய்திருக்கலாம். கால வெள்ளத்தில், இது எல்லா சிவாலயங்களுக்கும் பரவியிருக்க வேண்டும்.
பயிரிடும் போதும், சமைக்கும் போதும், சாப்பிடும் போதும் நல்லதையே சிந்தித்தால், நாம் சாப்பிடும் சாப்பாடே பிரசாதம் ஆகிவிடும். இனியேனும் செய்வோமா!
nanri: dinamalar varamalar
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உணவளிப்பது (அன்னதானம்) புண்ணியங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது இருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவதை விட இல்லாதவர்களுக்கு/மனவளம் குன்றியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வயிறு நிறைய உணவு அளித்தால் அனைத்து வகைப் புண்ணியமும் கிடைக்கும். சில தோஷங்களையும் நீக்கும்.
அன்னதானத்திற்கு அடுத்தபடியாக வஸ்திர தானம் (ஆடையை தானமாக வழங்குதல்), மாங்கல்ய தானம் (ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி செய்வது முன்னின்று செய்வது) சிறந்தவையாக கருதப்படுகிறது.
இவைகளை விட சிறந்த புண்ணியம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவலாம். இதனை செய்வதால் பிரம்மஹத்தி தோஷம் கூட விலகும் என சில ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.
"ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் - அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்" - திருவள்ளுவர்
முனிவர்கள் / துறவிகள் போன்ற சான்றோர்கள் தம் தவ வலிமையினால் தமக்குப் பசி தோன்றாதவாறு தம் பசியை ஆற்றிக்கொள்வார்கள். அவ்வாறு தமது பசியை ஆற்றிக்கொள்ளும் துறவிகளின் வலிமையைக் காட்டிலும், பிறர் பசியாற உணவளித்துக் காப்பவரின் வலிமையே சிறந்தது என, அன்னதானத்தின் பெருமையைத் தெயவப் புலவர் திருவள்ளுவர் மிகவும் சிறப்பித்து கூறுகிறார்
பால் - துன்பம் நீங்கும். ஆடை - ஆயுள் கூடும். தீபம் - கண்ணொளி சீராகும். கோயில்களுக்கு தீபம் போடுவதால் அரச பதவி கிட்டும். எள் தானத்தினால் எம பயம் விலகும். வெண்கலப் பாத்திரத்தில் தேன் தானம் செய்தால் புத்திரப் பேறு கிட்டும்.
பசு தானம் செய்தால் கிரிகடன், தேவ கடன், பித்ரு கடன் என்ற மூன்று கடன்களும் தீரும். அரிசி தானம் செய்தால் சகல பாவமும் தீரும். தாம்பூலம் பழத்துடன் கொடுப்பதால் லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும்.
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். இதைச் செய்தால் சொர்க்கம் கிட்டும். தற்காலத்தில் ரத்த தானம், கண் தானம் என்று சொல்லுவார்கள். இவைகளும் சிறந்த தானங்கள் தான். ஆனால் இவற்றை எப்பொழுதும் கொடுக்க முடியாது. ரத்ததானம் செய்யவும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. நீண்ட இடைவெளியும், நோயற்ற உடலும் இருக்க வேண்டும். கண்தானமும் இறந்த பின்புதான் செய்ய முடியும். ஆனால் அன்னதானம் நினைத்த நேரத்தில் செய்ய முடியும். நெல்லிக்கனி தானம் ஞானத்தைத் தரும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் கன்னிகாதானத்தை செய்தால் பிரம்ம பதவி கிட்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
தானங்கள் தங்கள் சக்திக்கு ஏற்பச் செய்ய வேண்டும் என்பது மிக முக்கியம். இப்படிச் செய்வதனால் யம பயம் இன்றி நேராகக் கைலாயம் செல்லலாம்.
தாம்பூலம் வெற்றுத் தாம்பூலமாக தராமல் கஸ்தூரி, கோரோஜனம் சேர்த்து தாம்பூல தானத்தைத் தரவேண்டும். இதனால் ராஜகுலத்தில் பிறந்து ராஜபோக வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்பார்கள். வஸ்திர தானம் வியாதியைத் தீர்க்கும். கற்பூர தானம் சக்ரவர்த்தியாகப் பிறக்கும் பாக்கியத்தைத் தரும். தாமரைப் பூ, மல்லிகைப் பூ மாலைகளை தானமாகக் கொடுத்தால் மன்னர் குலத்தில் பிறக்கும் பாக்கியம் கிடைக்கும்.
மலர்களைப் பற்றிக் கூறும்பொழுது ஒரு சிறு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. கோயில்களில் பூவை பிரசாதமாகத் தருவதும், வீடுகளில் சுமங்கலி, கன்னிப் பெண்களுக்கு பூக்களைத் தருவதும் ஒரு சம்பிரதாய பழக்கத்துடன் கூடிய புண்ணிய செயலாகும். தாழம்பூ தானம் செய்தால் விஷ்ணுவின் அனுக்கிரகம் கிடைக்கும். பாக்கு, வாசனை திரவியங்கள், பழங்கள் தானம் செய்தால் உயர் பதவி கிட்டும். மோர், பானகம், குடி தண்ணீர் தானம் தந்தால் ஜென்மாந்திர பாவம் தீரும் என்பார்கள்.
வீட்டிற்கு வருபவர்களுக்கு மோர், தண்ணீர் கொடுத்து உபசரிப்பது கூட தானம்தான். தானிய தானம் அகால மரணத்திலிருந்து காப்பாற்றும்.
அன்னதான மகிமையை விளக்கும் கதை
கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட - தான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்தவன். தானத்திற்கே பெயர் பெற்றவன். தானம் என்றால் என்ன என்பதை உலகிற்குக் காட்டியவன். அவன் இறந்ததும் கண்ணனால் சுவர்க்கத்துக்கு அனுப்பப்பட்டவன்.
அங்கு சென்று சகல வசதிகளுடன் இருந்தும் அவனுக்கு ஏனோ பசி அடங்கவில்லை. எப்பொழுதும் வயிற்றுப்பசி இருந்து கொண்டே இருந்தது. அவனும் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போனான். பிறகு சுவர்க்கத்தின தலைவனிடம் சென்று கேட்டான். நான் எவ்வளவு தான தருமங்கள் செய்திருக்கிறேன் - எனக்கு ஏன் இக்கொடிய தண்டனை - எனக்கு ஏன் இப்படிப் பசிக்கிறது எனக் கேட்டான்.
தலைவனோ - கர்ணா நீ பூவுலகில் வாழ்ந்த காலத்தில் பொன்னும் பொருளும் மனியும் ஏன் உன்னுயிரும் தானமாகக் கொடுத்து பெரும் புகழ் பெற்றவன். ஆனால் சிந்தித்துச் சொல் - எப்போழுதாவது யாருக்காகவாது அன்ன தானம் செய்திருக்கிறாயா - எனக் கேட்டான்.
கர்ணனுக்கு அன்ன தான செய்ததாக நினைவு இல்லை. அன்ன தானம் செய்யாததால் தான் இப்பொழுது வயிற்றுப்பசி அடங்க வில்லை எனவும் கூறக் கேட்டான். அப்படியானால் இதற்கு என்ன தான் வழி எனக் கேட்ட போது - தலைவன் கூறினான் - உனது வலது கை ஆள் காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் - பசி அடங்கி விடும் என்றான்.
கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. விரலைச் சப்பினால் பசி அடங்குமா - என்ன இது என ஐயப்பாடு இருந்தாலும் - வேறு வழி இல்லை என வலது கை ஆள் காட்டி விரலை வாயில் வைத்து சப்ப - பசி உடனே அடங்கிற்று.
ஒன்றும் புரியாத கர்ணன் - இது எப்படி மாய மந்திரம் எனக் கேட்க - தலைவன் கூறினான் - அன்பின் கர்ணா - நீ பூவுலகில் வாழும் போது உன்னிடம் ஒரு வறியவன் பசியுடன் வந்து எங்கு அன்னதானச் சத்திரம் இருக்கிறதென்று கேட்க - நீயும் உனது வலது கை ஆள்காட்டி விரலால் இதோ இப்பக்கம் செல்க என வழி காட்டினாய். அந்த புண்ணியச் செயல் - நற்செயல் உனக்கு இப்பொழுது உதவுகிறது எனக் கூற -கர்ணனும் அன்ன தான மகிமையை உணர்ந்தான்.
- நாமும் பிறந்த நாள் - திருமண நாள் - என்று கொண்டாடும் போதெல்லாம் - முதியோர் இல்லங்களில் வாழ்பவர்கள் - அனாதை இல்லங்களில் வாழ்பவர்கள் - வறியோர் இவர்களுக்கெல்லாம் அன்ன தானம் செய்தால் அவர்கள் பெறும் மகிழ்ச்சியானது நமக்கும் மகிழ்ச்சியினையும் புண்ணியத்தைனையும் தரும் .
அண்ணாமலையில் அன்னதானம் செய்யுங்கள்;நிம்மதியாக வாழுங்கள்
கோயில்களில் ஒரு வருடம் தொடர்ந்து செய்யப்படும் அன்னதானத்தால்
என்ன புண்ணியம் கிடைக்குமோ, அதை விட அதிகமான புண்ணியம் காசியில்
ஒரே ஒரு நாள் ஏழை ஒருவனுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.
காசியில் ஒரு ஆண்டு முழுக்க செய்யப்படும் அன்னதானம் தரும் புண்ணியத்தை
விட அதிக புண்ணியம் திரு அண்ணாமலையில் ஒரே ஒரு சாதாரண நாளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.
திருஅண்ணாமலையில் துவாதசி திதியன்று ஏழை ஒருவருக்கு செய்யப்படும்
அன்னதானமானது, அன்னதானம் செய்தவரின் வாழ்நாள் முழுக்க அன்னதானம்
செய்த பலனைத் தரும் என்பது அண்ணாமலையாரின் வாக்கு.ஆதாரம்:
அருணாச்சல புராணம்.
No comments:
Post a Comment