Sunday, 16 October 2016

*

ஆலயங்களிலே பக்தர்கள்”அரோகரா” என்று சொல்லி வணங்குவதன் பொருள் யாது?


அதாவது ஹர என்பது பாவங்களைப் போக்குவதென்று பொருள்படும். எனவே ” ஹர ஓ ஹர” என்பது தமிழிலே ”அரோகரா” என்று மருவி வந்துவிட்டதாகக் கூறுவார்கள். அரோகரா என்று சொல்லி வணங்கும் பொழுது நாம் செய்த தீவினையெல்லாம் அகன்று விடுமென்று நம்பப்படுகின்றது.



*


தானங்களின் பலன் :-



தானம் கொடுப்பது உலகில் உள்ள எதையும் விட சிறந்ததாகும். அதே சமயம் எந்த வகையான தானத்திற்கு என்ன வகையானபலன் கிடைக்கும்?

நெய் தானம் - பினி நீங்கும்

அரிசி தானம் - பாவம் அகலும்

தேங்காய் தானம் - காரிய வெற்றி

ஆடை தானம் - ஆயுள் விருத்தி

தேன் தானம் - புத்திர விருத்தி

அன்னதானம் - ஆண்டவன் அருள்


*


எப்போது தரிசனம் கூடாது? 


காலையில் கோவில் திறந்த உடனேயே சென்று சாமி கும்பிட கூடாது. சிவாச்சாரியார முதலில் தீபம் ஏற்றி ஆராதனை காட்டிய பிறகே நாம் சென்று தரிசிக்க வேண்டும். 
திரை போடப்பட்ட நேரங்களிலும் சன்னதியில் தீபம் இல்லாத போதும் சாமி தரிசனம் செய்யக் கூடாது. 

கோவிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பி வந்ததும் உடனே கால்களை கழுவக்கூடாது. சிறிது நேரம் கழித்த பின்னரே காலைக் கழுவ வேண்டும்.

No comments:

Post a Comment