Sunday, 16 October 2016


திருக்கைலாயப் பொதிய முனிப்பரம்பரை 1001 வது குரு மஹா சந்நிதானம் சக்தி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அடிமை ஸ்ரீ -ல-ஸ்ரீ வேங்கடராம சுவாமிகள் அருளிய

நாளும் நிறமும்

ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை ஏழு நாட்களுக்கும் உரித்தான சிறப்பான நிறங்கள் உண்டு. இவை ஸ்ரீஅகஸ்தியரின் "கிரஹமாலா" கிரந்த நாடிகளில் விவரிக்கப்பட்டுள்ளன. இவை ஆண், பெண் இரண்டு பாலாருக்கும் பொதுவான நிறங்களாகும்.

நேர்முகத்தேர்வு, தேர்வுகள், சாரணி, அலுவலகம், கல்லூரி போன்றவற்றிற்குச் செல்வோர் அந்தந்த நாளுக்குத்தான வண்ணத்தில் ஆடைகள் தரித்தால்

1. எடுத்த நற்காரியம் கைகூடும்
2. தேர்வில் / நேர்முகத்தேர்வில் வெற்றி பெறுவர்.
3. மேல் அதிகாரிகளின் / பெரியோர்களின் நன்மதிப்பைப் பெறுவர்.

நாள் நிறங்கள்
ஞாயிறு -ஆரஞ்சு
திங்கள்- வெள்ளை + சிவப்பு
செவ்வாய்- சிவப்பு
புதன் -பச்சை
வியாழன் -மஞ்சள்
வெள்ளி- வெளிர் நீலம்
சனி- கருநீலம் / கருப்பு

பெண் பார்த்தல், நிச்சயதார்த்தம் போன்றவற்றில் மேற்கண்ட நிறங்களில் உடைகள், ரிப்பன் அணிந்தால் சுபகாரியங்கள் நன்கு நிறைவேறும்.

ஆனால் ரேஸ், லாட்டரிகள் போன்ற குறுக்கு வழிகளுக்கு இதனைப் பயன்படுத்தினால் சாபங்கள் உண்டாகும்.

நன்றி - ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம்
கிரிவலம் சாலை ,ஆடையூர் ,திருஅண்ணாமலை
  

No comments:

Post a Comment