புலால் உணவால் வரும் கேடுகள்
மனித வர்க்கதிற்கு பல்வேறு வகையான தானியங்களும், காய்கறிகளும், கிழங்கு வகைகளும், கனி வகைகளும், கீரை வகைகளும் இன்னும் பலவிதமான தாவர உணவுகளையும் மனித சமுதாயம் உயிர் வாழ இயற்கை தாய் தனது பெருங்கருணையினால் படைத்திருக்கிறார். இப்படிப்பட்ட இயற்கையின் கொடையாகிய தாவர உணவை விடுத்து ஆடு, கோழி, மீன் போன்ற மிருகாதி உணவுகளை சுவைக்காக அவைகளின் உயிரைக் கொன்று சாப்பிடக்கூடாது. உயிருள்ள மிருகங்களும், பறவைகளும், நீர்வாழ் உயிரினங்களும் கொல்லும்போது தம்மைக் காத்துக் கொள்ள பேசக்கூட தெரியாத வகையில் உள்ளது என்ற காரணத்தால் அவைகளைக் கொல்வது இயற்கைக்கு ஒவ்வாத செயலாகும்.
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?
-திருக்குறள்- புலால் மறுத்தல்
தன் உடம்பை பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும். (நன்றி- மு. வரதராசனார்)
நாம் பெற்ற தேகம் எப்படியும் கண்டிப்பாக ஒருநாள் அழியத்தான் போகிறது. அப்படி அழியப்போகின்ற இந்த உடலை வளர்ப்பதற்கு தாவர உணவை தவிர்த்து பாதகமான ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை புசித்தாலும் காப்பாற்ற முடியாது. ஆகவே நிலையில்லாத தேகத்திற்காக மாமிச உணவை உண்டு அழியாத ஆன்மாவிற்கு பாவச்சுமையை ஏற்றி நரகத்தில் வீழ்த்துவது எந்தவிதத்தில் நியாயம்?
ஆகவே ஆன்மீக நாட்டம் உள்ள அன்பர்கள் இதுவரை இக்கருத்தை உணராமல் புசித்திருந்தாலும் இனியேனும் இதைப் புரிந்துகொண்டு கொடுமையான மாமிச உண்ணும் பழக்கத்திலிருந்து விடுபடுங்கள்.
-ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகர்.
*
எப்பொழுதுமே நமது முன்னோர்கள் மாமிசத்தை உணவாகக் கொள்வதை வரவேற்கவே இல்லை ,,,
நம் தாய்திருநாட்டில் தோன்றியி 63 நாயன்மார்களும், ஆழ்வார்களும்
அதை கடுமையாக எதிர்த்திருக்கிறார்க்ள்,
எடுத்துக்காட்டாக,
திருமந்திரத்தில்.
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன் தன் துதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே
என்னும் திருமூலரின் திருவாக்கை நினைவு கொள்ள வேண்டும் , மேலும் வள்ளுவப் பெருந்தகை ,
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று
என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்...
*
மனித வர்க்கதிற்கு பல்வேறு வகையான தானியங்களும், காய்கறிகளும், கிழங்கு வகைகளும், கனி வகைகளும், கீரை வகைகளும் இன்னும் பலவிதமான தாவர உணவுகளையும் மனித சமுதாயம் உயிர் வாழ இயற்கை தாய் தனது பெருங்கருணையினால் படைத்திருக்கிறார். இப்படிப்பட்ட இயற்கையின் கொடையாகிய தாவர உணவை விடுத்து ஆடு, கோழி, மீன் போன்ற மிருகாதி உணவுகளை சுவைக்காக அவைகளின் உயிரைக் கொன்று சாப்பிடக்கூடாது. உயிருள்ள மிருகங்களும், பறவைகளும், நீர்வாழ் உயிரினங்களும் கொல்லும்போது தம்மைக் காத்துக் கொள்ள பேசக்கூட தெரியாத வகையில் உள்ளது என்ற காரணத்தால் அவைகளைக் கொல்வது இயற்கைக்கு ஒவ்வாத செயலாகும்.
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?
-திருக்குறள்- புலால் மறுத்தல்
தன் உடம்பை பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும். (நன்றி- மு. வரதராசனார்)
நாம் பெற்ற தேகம் எப்படியும் கண்டிப்பாக ஒருநாள் அழியத்தான் போகிறது. அப்படி அழியப்போகின்ற இந்த உடலை வளர்ப்பதற்கு தாவர உணவை தவிர்த்து பாதகமான ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை புசித்தாலும் காப்பாற்ற முடியாது. ஆகவே நிலையில்லாத தேகத்திற்காக மாமிச உணவை உண்டு அழியாத ஆன்மாவிற்கு பாவச்சுமையை ஏற்றி நரகத்தில் வீழ்த்துவது எந்தவிதத்தில் நியாயம்?
ஆகவே ஆன்மீக நாட்டம் உள்ள அன்பர்கள் இதுவரை இக்கருத்தை உணராமல் புசித்திருந்தாலும் இனியேனும் இதைப் புரிந்துகொண்டு கொடுமையான மாமிச உண்ணும் பழக்கத்திலிருந்து விடுபடுங்கள்.
-ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகர்.
*
சைவ உணவில் குறைவான கொழுப்புச்சத்து இருப்பதால் மாரடைப்பு உள்ளவர்கள் எக்கவலையுமின்றி இந்த உணவை உண்ணலாம் என்றும் அவர்களுக்குத் தெரியாது.அதிக மாமிசம் உண்பவர்களுக்குக் குடல் வால்நோய் ஏற்படும் என்றும் அசைவ உணவில் நைட்ரஜன் உள்ளதால் சிறுநீரகத்திற்கு அதிக வேலை ஏற்படுகிறது என்றும் நைட்ரஜன் அதிகமானால் ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்து மூட்டுக்களில் படிந்துவிடும் என்றும் அதனால் இவர்களுக்கு மூட்டுவலி ஏற்படுகிறது என்றும் நவீன மருத்துவம் கண்டறிந்துள்ளது.தவிர இதனால் குடலில் சில வகையான குடல்புழுக்கள் உண்டாகின்றன.மனித உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதம் சைவ உணவில் முழுமையாகக் கிடைக்கிறது.மனதைச் செம்மைப்படுத்த சைவ உணவு தேவை.மேலும் அசைவம் தொடர்ந்து சாப்பிடும்போது சாப்பிடுபவர் மிருக உணர்ச்சியடைகிறார்.அவர்களது உடலில் துர்நாற்றம் உண்டாகிறது.
எப்பொழுதுமே நமது முன்னோர்கள் மாமிசத்தை உணவாகக் கொள்வதை வரவேற்கவே இல்லை ,,,
நம் தாய்திருநாட்டில் தோன்றியி 63 நாயன்மார்களும், ஆழ்வார்களும்
அதை கடுமையாக எதிர்த்திருக்கிறார்க்ள்,
எடுத்துக்காட்டாக,
திருமந்திரத்தில்.
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன் தன் துதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே
என்னும் திருமூலரின் திருவாக்கை நினைவு கொள்ள வேண்டும் , மேலும் வள்ளுவப் பெருந்தகை ,
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று
என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்...
*
No comments:
Post a Comment