பசுவின் உடம்பு முழுவதும் பால் நிறைந்திருக்கின்றது ஆனாலும் பசுவின் மடியிலிருந்து பாலைப் பெறுகிறோம், கம்பிகளில் மறைந்து நிற்கும் மின்சார ஆற்றல் மின்விளக்கின் மூலம் வெளிப்படுகிறது போல எங்கும் மறைந்து நிறைந்திருக்கின்ற இறைவன் திருவருளைத் திருக்கோயிலின் திருவுருவங்கள் மூலம் பெறுவது எளிது.ஆலயங்கள் சென்று வழிபடுவோர் உள்ளத்தை ஆலயமாகக் கொண்டு இறைவன் எழுந்தருள்கின்றான்."கோபுர தரிசணம் கோடி புண்ணியம்". கோபுரத்தை ஸ்தூல லிங்கமாகவும், இறைவனின் பாதங்களாகவும் பாவித்து வணங்கிக் கோயிலுக்குகள் புக வேண்டும்.கோயில்கள் நமது உடம்பின் வடிலேயே அமைக்ப்பட்டிருக்கின்றன. இதனை திருமூலர்"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்வள்ளற் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே" என்று கூறுகிறார்."தேஹா தேவாலய: ப்ரோக்தோஜீவோ தேவ: ஸநாதன:த்யஜேத் அஞ்ஞான நிர்மால்யம்ஸோஹம் பாவேன் பூஜயேத்"என்ற வேத வாக்காலும் இதனை அறியலாம். சிவா திருச்சிற்றம்பலம்.
ஆலயப் ப்ரகாரங்கள்:-
மூன்று ப்ராகாரங்கள் அன்னமயம், பிராணமயம், மனோமயம் என்ற மூன்று கோசங்களையும் உணர்த்துகின்றன.ஐந்து ப்ராகாரங்கள் இவற்றோடு விஞ்ஞான மயம்,ஆனந்த மயம் எனும் கோசங்களையும் குறிக்கின்றன.ஏழு ப்ராகாரங்கள் ஸ்தூல சூக்ஷ்மங்களை விளக்குகின்றன.
மனித உடலும் ஆலயமும்:-
ஒரு மனித உடலமைப்பை ஆதாரமாகக் கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வழிபாட்டுக்குரிய அமைப்பாக மதிக்கப்படுகிறது. ஆலயத்தை "ஆ"+"லயம்" என பிரிக்க வேண்டும். "ஆ" என்றால் உயிர் என்றும், "லயம்" என்றால் லயிக்கின்ற என்றும் பொருள்.உயிர்கள் லயிக்கின்ற இடம் ஆலயம் எனப்படும். மனிதனின் இரண்டு பாதங்கள் கோயில் வாசல் கோபுரங்கள். கொடி மரத்தில் 32 வளையங்கள் இருக்கும். இது மனித உடலின் முதுகுத் தண்டில் உள்ள 32 எலும்பு வளையங்களைக் குறிக்கும். மனிதனின் நாபி ஸ்தானத்தைக் குறிக்க நந்தி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தீய குணங்களை இதயத்திலிருந்து நீக்கி பலியிடுவதைக் காட்டும் வகையில் பலி பீடம் அமைக்கப்பட்டுள்ளது. புருவ மத்தியை கர்ப்ப கிரகம் என்கிறார்கள்.
சிவா திருச்சிற்றம்பலம்
மனித உடலில் ஆறு ஆதாரங்கள்:-
மூலாதாரம் - ஓம் ஸ்ரீ விநாயகர்
சுவாதிஷ்டானம் - ஓம் ஸ்ரீ பெருமாள்
மணிபூரகம் - ஓம் ஸ்ரீ முருகன்
அனாகதம் - ஓம் ஸ்ரீ சிவபெருமான்
விசுத்தி - ஓம் ஸ்ரீ சூரியன்
ஆக்ஞை - ஓம் ஸ்ரீ அம்பிகை
சிவா திருச்சிற்றம்பலம்.
*
ஆலய வழிபாட்டின் அவசியம் :-
“இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். ஆதலால் நாம் இருக்கும் இடத்திலேயே வணங்கினால் போதாதா? ஆலயத்துக்குச் சென்றுதான் வணங்கவேண்டுமா?” என்று வினவுபவர் பலருண்டு.
பசுவின் உடம்பு முழுவதும் பால் நிறைந்நிருக்கின்றது. பாலைப் பெற முயலுகின்ற ஒருவன் அதன் கொம்பையோ, காதுகளையோ, வாலையோ வருடினால் பால் கிடைக்குமா? எனவே, பால் பெற விரும்புபவன் பசுவின் மடியை வருடிப் பால் பெறுவது போல, இறைவனின் அருளைப்பெற விரும்;புவோன் ஆலயத்திற்குச் சென்று இறைவன் திருமுன் நின்று வழிபட்டு திருவருளைப் பெறவேண்டும்.
இறைவனின் திருவருளைப் பெற்று, இறைவனுடன் உறவாடிய நால்வர்களும், ஆழ்வாராதிகளும் திருத்தலங்கள் தோறும் நடந்துசென்று ஆலயவழிபாடு செய்யும் நியதியை மேற்கொண்டிருந்தனர் என்றால் அதன் பெருமையும், முக்கியத்துவமும் அளவிடற்கரியதன்றோ?
ஆலயங்கள்தோறும் சென்று வழிபடுவோரின் உள்ளத்தை இறைவன் தனக்கு ஆலயமாகக் கொண்டு எழுந்தருளுகின்றான் என்பதை திருமூலர் இப்பாடல் மூலம் விளக்குகின்றார்:
“நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்த சிவபெருமா னென்று
பாடுமின்: பாடிப் பணிமின்: பணிந்தபின்
கூடி நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே”
மனிதனைப் புனிதனாகச் செய்வது ஆலயம். தெய்வ அருளாற்றல் அங்கே நிலவிக் கொண்டு இருக்கின்றது. அங்கு சென்று வழிபடுவோரது வினைகளாகிய பஞ்சுப் பொதிகள், திருவருளாகிய அறைபொறியால் வெந்து சாம்பராகின்றன. இகபர நலன்களை எளிதில் எய்துகின்றன.
அருட்பயன் பெற்ற ஆன்றோரும் வாசனா மலம் தாக்காதிருக்கும் பொருட்டு ஆலய வழிபாடு புரிவது இன்றியமையாதது என்று இயம்புகின்றது கீழ்க்காணும் சிவஞானபோதம் நூலின் 12 வது சூத்திரம்:
“செம்மலர் நோன்றாள் சேரலொட்டா
அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ
மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயம் தானும் அரனெனத் தொழுமே”
(நன்றி : வாரியார் சுவாமிகளின் ‘அறிவுரையமுது’ நூலிலிருந்து)
*
http://www.vikatan.com/sakthivikatan/Doctor-Vikatan/6553-help-others-that-is-god-wisdom-devotor-ponnambala-adigalar.html
'ஆலயம் தொழுவது சாலவும் நன்று'...'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்'... சும்மாவா சொன்னார்கள் ? நம் இந்து கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களா ? அதன் சிறப்பைக் கூறி ...வெறும் வழிபாட்டுத்தலங்கள் இல்லை என்கிறது ஆலய சிவ ஆகமும், சைவ சித்தாந்தங்களும்... சரி ஆலய சிறப்பை அதன் அமைப்பை வைத்து பார்ப்போம். உடம்பில் பாதங்கள் கோபுரமாகவும், முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும், தொடை நிறுத்த மண்டபமாகவும், கொப்பூழ் (தொப்புள்) பலி பீடமாகவும், மார்பு மகா மண்டபமாகவும், கழுத்து அர்த்த மண்டபமாகவும், சிரம் (தலை) கருவறையாகவும் கோயிலாய் எழுந்துள்ளது என்பது ஆகம மரபு. கோயில் அமைப்பில், உடலில் அன்னமய கோசம், பிரணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்த மய கோசம் ஆகிய ஐந்து உள்ளது போல கோயிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன. தூல சரீரம், சூட்சும சரீரம், குண சரீரம், அஞ்சுக சரீரம், காரண சரீரம் போல ஐந்து சபைகள் உள்ளன. ஆகம விதிப்படி ஆலயங்கள் கருவறை, ஒன்று முதல் ஐந்து பிரகாரங்களுடன் கூடிய ராஜகோபுரம், பலி பீடம், கொடிமரம், யாகசாலை, நந்தி முதலியவற்றுடன் விளங்கும். மேலும் நம் உடல் தோல், இரத்தம், நரம்பு போன்ற ஏழு வகை தாதுக்களால் ஆனது போல் ஆலயமும் செங்கல், காரை, கல், போன்ற ஏழு வகையான பொருள்களால் ஆனது என்கிறது நமது சாத்திரங்கள். கோயில் என்பதை கோ-இல் எனப் பிரித்து 'கோ' என்றால் இறைவன். −ல் என்றால் இருப்பிடம் என்கிறார்கள். ஆக, கோயில் என்பது இறைவனின் இருப்பிடம் என்றும் ஆலயம் என்பதை 'ஆ' ஆன்மா என்றும் லயம் சேருமிடம் என்றும் பொருள்படுகிறது. மனிதனின் வடிவமாகச் சிவாலயத்தை ஒப்பிடும்போது (1) கருவறை- தலை, (2) அர்த்த மண்டபம் - கழுத்து, (3) மகா மண்டபம் - மார்பு, (4) யாகசாலை - நாடி, (5) கோபுரம் - பாதம் என்றும் கூறுவர். அதே போல் (1) ஆலயம் - உடல், (2) கோபுரம் - வாய், (3) நந்தி - நாக்கு, (4) துவஜஸ்தம்பம் (கொடிமரம்) - உள்நாக்கு, (5) தீபங்கள் - பஞ்சேந்திரியங்கள், (6) கருவறை - −தயம், (7) சிவலிங்கம் -உயிர் என்றும் கூறுவர். உள்ளமே கோவில் என்று 'தத்துவார்த்தமாக' உணர்ந்து சொல்லி இருக்கிறார்கள் அல்லவா ? படிப்பதற்கே மெய் சிலிர்கிறது. இதன் 'சூட்சமம்' தெரியாமல் கோவில்கள் கூடாது என்கிறார்கள் நாத்திகர்கள். அறிவு கெட்டவர்கள் தானே ?
ஆலயப் ப்ரகாரங்கள்:-
மூன்று ப்ராகாரங்கள் அன்னமயம், பிராணமயம், மனோமயம் என்ற மூன்று கோசங்களையும் உணர்த்துகின்றன.ஐந்து ப்ராகாரங்கள் இவற்றோடு விஞ்ஞான மயம்,ஆனந்த மயம் எனும் கோசங்களையும் குறிக்கின்றன.ஏழு ப்ராகாரங்கள் ஸ்தூல சூக்ஷ்மங்களை விளக்குகின்றன.
மனித உடலும் ஆலயமும்:-
ஒரு மனித உடலமைப்பை ஆதாரமாகக் கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வழிபாட்டுக்குரிய அமைப்பாக மதிக்கப்படுகிறது. ஆலயத்தை "ஆ"+"லயம்" என பிரிக்க வேண்டும். "ஆ" என்றால் உயிர் என்றும், "லயம்" என்றால் லயிக்கின்ற என்றும் பொருள்.உயிர்கள் லயிக்கின்ற இடம் ஆலயம் எனப்படும். மனிதனின் இரண்டு பாதங்கள் கோயில் வாசல் கோபுரங்கள். கொடி மரத்தில் 32 வளையங்கள் இருக்கும். இது மனித உடலின் முதுகுத் தண்டில் உள்ள 32 எலும்பு வளையங்களைக் குறிக்கும். மனிதனின் நாபி ஸ்தானத்தைக் குறிக்க நந்தி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தீய குணங்களை இதயத்திலிருந்து நீக்கி பலியிடுவதைக் காட்டும் வகையில் பலி பீடம் அமைக்கப்பட்டுள்ளது. புருவ மத்தியை கர்ப்ப கிரகம் என்கிறார்கள்.
சிவா திருச்சிற்றம்பலம்
மனித உடலில் ஆறு ஆதாரங்கள்:-
மூலாதாரம் - ஓம் ஸ்ரீ விநாயகர்
சுவாதிஷ்டானம் - ஓம் ஸ்ரீ பெருமாள்
மணிபூரகம் - ஓம் ஸ்ரீ முருகன்
அனாகதம் - ஓம் ஸ்ரீ சிவபெருமான்
விசுத்தி - ஓம் ஸ்ரீ சூரியன்
ஆக்ஞை - ஓம் ஸ்ரீ அம்பிகை
சிவா திருச்சிற்றம்பலம்.
*
ஆலய வழிபாட்டின் அவசியம் :-
“இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். ஆதலால் நாம் இருக்கும் இடத்திலேயே வணங்கினால் போதாதா? ஆலயத்துக்குச் சென்றுதான் வணங்கவேண்டுமா?” என்று வினவுபவர் பலருண்டு.
பசுவின் உடம்பு முழுவதும் பால் நிறைந்நிருக்கின்றது. பாலைப் பெற முயலுகின்ற ஒருவன் அதன் கொம்பையோ, காதுகளையோ, வாலையோ வருடினால் பால் கிடைக்குமா? எனவே, பால் பெற விரும்புபவன் பசுவின் மடியை வருடிப் பால் பெறுவது போல, இறைவனின் அருளைப்பெற விரும்;புவோன் ஆலயத்திற்குச் சென்று இறைவன் திருமுன் நின்று வழிபட்டு திருவருளைப் பெறவேண்டும்.
இறைவனின் திருவருளைப் பெற்று, இறைவனுடன் உறவாடிய நால்வர்களும், ஆழ்வாராதிகளும் திருத்தலங்கள் தோறும் நடந்துசென்று ஆலயவழிபாடு செய்யும் நியதியை மேற்கொண்டிருந்தனர் என்றால் அதன் பெருமையும், முக்கியத்துவமும் அளவிடற்கரியதன்றோ?
ஆலயங்கள்தோறும் சென்று வழிபடுவோரின் உள்ளத்தை இறைவன் தனக்கு ஆலயமாகக் கொண்டு எழுந்தருளுகின்றான் என்பதை திருமூலர் இப்பாடல் மூலம் விளக்குகின்றார்:
“நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்த சிவபெருமா னென்று
பாடுமின்: பாடிப் பணிமின்: பணிந்தபின்
கூடி நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே”
மனிதனைப் புனிதனாகச் செய்வது ஆலயம். தெய்வ அருளாற்றல் அங்கே நிலவிக் கொண்டு இருக்கின்றது. அங்கு சென்று வழிபடுவோரது வினைகளாகிய பஞ்சுப் பொதிகள், திருவருளாகிய அறைபொறியால் வெந்து சாம்பராகின்றன. இகபர நலன்களை எளிதில் எய்துகின்றன.
அருட்பயன் பெற்ற ஆன்றோரும் வாசனா மலம் தாக்காதிருக்கும் பொருட்டு ஆலய வழிபாடு புரிவது இன்றியமையாதது என்று இயம்புகின்றது கீழ்க்காணும் சிவஞானபோதம் நூலின் 12 வது சூத்திரம்:
“செம்மலர் நோன்றாள் சேரலொட்டா
அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ
மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயம் தானும் அரனெனத் தொழுமே”
(நன்றி : வாரியார் சுவாமிகளின் ‘அறிவுரையமுது’ நூலிலிருந்து)
*
http://www.vikatan.com/sakthivikatan/Doctor-Vikatan/6553-help-others-that-is-god-wisdom-devotor-ponnambala-adigalar.html
'ஆலயம் தொழுவது சாலவும் நன்று'...'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்'... சும்மாவா சொன்னார்கள் ? நம் இந்து கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களா ? அதன் சிறப்பைக் கூறி ...வெறும் வழிபாட்டுத்தலங்கள் இல்லை என்கிறது ஆலய சிவ ஆகமும், சைவ சித்தாந்தங்களும்... சரி ஆலய சிறப்பை அதன் அமைப்பை வைத்து பார்ப்போம். உடம்பில் பாதங்கள் கோபுரமாகவும், முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும், தொடை நிறுத்த மண்டபமாகவும், கொப்பூழ் (தொப்புள்) பலி பீடமாகவும், மார்பு மகா மண்டபமாகவும், கழுத்து அர்த்த மண்டபமாகவும், சிரம் (தலை) கருவறையாகவும் கோயிலாய் எழுந்துள்ளது என்பது ஆகம மரபு. கோயில் அமைப்பில், உடலில் அன்னமய கோசம், பிரணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்த மய கோசம் ஆகிய ஐந்து உள்ளது போல கோயிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன. தூல சரீரம், சூட்சும சரீரம், குண சரீரம், அஞ்சுக சரீரம், காரண சரீரம் போல ஐந்து சபைகள் உள்ளன. ஆகம விதிப்படி ஆலயங்கள் கருவறை, ஒன்று முதல் ஐந்து பிரகாரங்களுடன் கூடிய ராஜகோபுரம், பலி பீடம், கொடிமரம், யாகசாலை, நந்தி முதலியவற்றுடன் விளங்கும். மேலும் நம் உடல் தோல், இரத்தம், நரம்பு போன்ற ஏழு வகை தாதுக்களால் ஆனது போல் ஆலயமும் செங்கல், காரை, கல், போன்ற ஏழு வகையான பொருள்களால் ஆனது என்கிறது நமது சாத்திரங்கள். கோயில் என்பதை கோ-இல் எனப் பிரித்து 'கோ' என்றால் இறைவன். −ல் என்றால் இருப்பிடம் என்கிறார்கள். ஆக, கோயில் என்பது இறைவனின் இருப்பிடம் என்றும் ஆலயம் என்பதை 'ஆ' ஆன்மா என்றும் லயம் சேருமிடம் என்றும் பொருள்படுகிறது. மனிதனின் வடிவமாகச் சிவாலயத்தை ஒப்பிடும்போது (1) கருவறை- தலை, (2) அர்த்த மண்டபம் - கழுத்து, (3) மகா மண்டபம் - மார்பு, (4) யாகசாலை - நாடி, (5) கோபுரம் - பாதம் என்றும் கூறுவர். அதே போல் (1) ஆலயம் - உடல், (2) கோபுரம் - வாய், (3) நந்தி - நாக்கு, (4) துவஜஸ்தம்பம் (கொடிமரம்) - உள்நாக்கு, (5) தீபங்கள் - பஞ்சேந்திரியங்கள், (6) கருவறை - −தயம், (7) சிவலிங்கம் -உயிர் என்றும் கூறுவர். உள்ளமே கோவில் என்று 'தத்துவார்த்தமாக' உணர்ந்து சொல்லி இருக்கிறார்கள் அல்லவா ? படிப்பதற்கே மெய் சிலிர்கிறது. இதன் 'சூட்சமம்' தெரியாமல் கோவில்கள் கூடாது என்கிறார்கள் நாத்திகர்கள். அறிவு கெட்டவர்கள் தானே ?
No comments:
Post a Comment